Thursday, July 24, 2008

ஊமை பேசுவதும் முடவர் மலையைக் கடப்பதும்...


எவ்வளவு தான் தன்னம்பிக்கை இருந்தாலும் சில நேரங்களில் சில செயல்களைச் செய்ய முனையும் போது ஒரு மெல்லிய நடுக்கம் ஏற்படுவது இயல்பாக இருக்கிறது. மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது; அடியேனுக்கு அந்த நிலை பலமுறை ஏற்பட்டுள்ளது. இறை நம்பிக்கையே தன்னம்பிக்கை என்ற கருத்தில் உறுதியாக இருக்க எனக்கு சில துதிப்பாடல்கள் துணையாக அமைகின்றது. அப்படி மெல்லிய நடுக்கம் ஏற்படும் போதெல்லாம் உதவும் துதிகளில் ஒன்று இந்த சுலோகம்.

ஊமையைப் பேச வைத்து பெரும்கவியாக்கிய கதைகளைப் படித்திருக்கிறோம். குள்ள முனிவன் அடக்க இயலாத விந்திய மலையைக் கடந்ததைப் பற்றி படித்திருக்கிறோம். அப்படி செயற்கரிய செயல்களை எல்லாம் அவர்கள் யாருடைய கருணையால் செய்தார்களோ அந்த இறைசக்தியே எனக்கும் துணை புரிகிறது; கருணை புரிகிறது என்ற எண்ணம் அளவில்லாத தன்னம்பிக்கையைத் தருகிறது.

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்
யத் க்ருபா தம் அஹம் வந்தே பரமானந்த மாதவம்


மூகம் கரோதி வாசாலம் - ஊமை பெரும் பேச்சாற்றல் மிக்கவர் ஆவதும்

பங்கும் லங்கயதே கிரிம் - முடவர் பெரும் மலையை கடப்பதும்

யத் க்ருபா தம் அஹம் வந்தே - யார் கருணையால் நடக்கிறதோ அவரை நான் வணங்குகிறேன்


பரமானந்த மாதவம் - அவர் பரமானந்தரும் மாதவரும் ஆனவர்

பேசமுடியாதவர் யார் கருணையால் பெரும் பேச்சாற்றல் மிக்கவர் ஆகிறாரோ முடவர் யார் கருணையால் பெரும் மலையைக் கடக்கிறாரோ அந்த பரமானந்த மாதவனை அடியேனும் வணங்குகிறேன்.

Monday, July 21, 2008

குருவின் திருப்பாதக் கமலங்களில்...


குரு சரணாம்புஜ நிர்பர பக்த:
சம்சாராத் அசிராத் பவ முக்த:
சேந்த்ரிய மானச நியமாத் ஏவம்
த்ரக்ஸ்யசி நிஜஹ்ருதயஸ்தம் தேவம்

குரு சரண அம்புஜ நிர்பர பக்த: - குருவின் திருப்பாதக் கமலங்களில் உன் பாரங்களையெல்லாம் முழுவதுமாக இட்டு பக்தியுடன் இருந்தால்

சம்சாராத் அசிராத் பவ முக்த: - பிறப்பு இறப்பு என்ற சம்சார சுழலிலிருந்து விரைவிலேயே விடுதலை பெறுவாய்.

ச இந்த்ரிய மானச நியமாத் ஏவம் - புலனகள், மனது இவற்றை தகுந்த வழியில் செலுத்துவதன் மூலம்

த்ரக்ஸ்யசி நிஜஹ்ருதயஸ்தம் தேவம் - இருதயத்தில் நிலைத்து நிற்கும் இறைவனை நேரடியாக தரிசிக்கலாம்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Saturday, July 19, 2008

மிக்கக் கவனத்துடன் செய்ய வேண்டிய செயல்கள்


ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
நித்யாநித்ய விவேக விசாரம்
ஜாப்யாசமேத சமாதி விதானம்
குர்வவதானம் மஹதவதானம்

ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம் - மூச்சின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது; புலன்களை அதன் வழியிலேயே செல்லாமல் தடுப்பது

நித்ய அநித்ய விவேக விசாரம் - நிலையானது எது, நிலையற்றது எது என்ற பகுத்தறிவினைப் பெறத் தனக்குள் தானே கேள்விகள் கேட்டுக் கொள்வது

ஜாப்யாசமேத சமாதி விதானம் - இறைவனின் திருநாமங்களின் ஜபத்துடன் கூடிய மனசமநிலையை (சமாதியை) அடைவது.

குரு அவதானம் மஹத் அவதானம் - மிக்கக் கவனத்துடன் செய்ய வேண்டிய செயல்கள் இவை.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Wednesday, July 16, 2008

பெற்ற பிள்ளையிடம் கூட பணம் படைத்தவனுக்கு பயம்


அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத் சுக லேச: சத்யம்
புத்ராதபி தன பாஜாம் பீதி:
சர்வத்ரைசா விஹிதா ரீதி:


அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம் - பொருள் பொருளற்றதாய் எப்போதும் சிந்தனை செய்வீர்கள்.

நாஸ்தி தத் சுக லேச: சத்யம் - உண்மையைச் சொன்னால் அதில் சிறிதளவும் சுகம் இல்லை.

புத்ராதபி தன பாஜாம் பீதி: - பெற்ற பிள்ளையிடம் கூட பணம் படைத்தவனுக்கு பயம் உண்டு.

சர்வத்ரைசா விஹிதா ரீதி: - எங்கும் இதே நியதியாக இருக்கிறது.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Sunday, July 13, 2008

பாவ நடத்தையுடன் கூடிய வாழ்க்கையை யாரும் விடுவதில்லை


சுகத: க்ரியதே ராமாபோக:
பஸ்சாதந்த சரீரே ரோக:
யத்யபி லோகே மரணம் சரணம்
ததபி ந முஞ்சதி பாபாசரணம்

சுகத: க்ரியதே ராமாபோக: - (ஒருவன்) மிக்க சுகத்துடன் (எந்தக் கவலையும் இன்றி இயன்றவரை) புலனின்பங்களில் ஆழ்ந்து போகிறான்.

பஸ்சாத் அந்த சரீரே ரோக: - பின்னர் இறுதிக் காலத்தில் அதனால் உடலில் நோய்களைப் பெறுகிறான்.

யத்யபி லோகே மரணம் சரணம் - இந்த உலகத்தில் எல்லோருக்கும் மரணம் மட்டுமே ஒரே கதி என்பதை அறிந்திருந்த போதும்

ததபி ந முஞ்சதி பாப ஆசரணம் - பாவ நடத்தையுடன் கூடிய வாழ்க்கையை யாரும் விடுவதில்லை.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Wednesday, July 9, 2008

பாடப்பட வேண்டியவை கீதையும் இறைவனின் ஆயிரம் நாமங்களும்


கேயம் கீதா நாம சஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம்
நேயம் ஸஜ்ஜன சங்கே சித்தம்
தேயம் தீன ஜனாய ச வித்தம்

கேயம் கீதா நாம சஹஸ்ரம் - பாடப்பட வேண்டியவை கீதையும் இறைவனின் ஆயிரம் நாமங்களும்

த்யேயம் ஸ்ரீபதி ரூபம் அஜஸ்ரம் - இடைவீடின்றி த்யானிக்கப்பட வேண்டியது திருமகள் மணாளனின் திருவுருவம்

நேயம் ஸஜ்ஜன சங்கே சித்தம் - மனத்தை அன்புடன் நிலைநிறுத்த வேண்டியது நன்மக்களின் கூட்டுறவில்

தேயம் தீன ஜனாய ச வித்தம் - செல்வம் வழங்கப்பட வேண்டியது ஏழ்மையில் இருப்பவர்களுக்கு

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Thursday, July 3, 2008

ஸ்ரீ சுப்ரமண்ய ஷடக்ஷரி மஹா-மந்த்ர ஸ்தோத்ரம்....


முருகனருள் வலைப்பூ 100ஆம் பதிவினை நோக்கிச் செல்லும் விட்ஜெடைப் பார்த்த போது, இதை எழுதத் தோன்றியது. இந்தப் பதிவினை இரண்டு நாட்கள் முன்பே போட்டிருக்க வேண்டும். எழுத நேரம் கிடைக்கவில்லை. முருகனருள் வலைப்பூவில் பதிவிடும் நண்பர்கள் எல்லோருக்கும் முருகனருள் கிடைக்க வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் மஹா மந்திரம் என்று ஒன்று இருக்கும். அதில் முருகனுக்கானது ஷட்-அக்ஷரங்களால் ஆன 'சரவணபவ'. ஆறுமுகனது அருளை அள்ளித்தந்திடும் இந்த ஸ்தோத்ரம் குமார தந்திரம் என்னும் மந்திர சாஸ்திர நூலில் இருக்கிறது. நமக்கு மொழிப் பேதமிருந்தாலும் நம் கந்தனுக்கு எல்லா மொழியும் தம்மொழிதானே!!!


அதாத: ஸ்ம்ப்ரவக்ஷ்யாமி மூலமந்த்ர ஸ்தவம் சிவம்
ஜபதாம் ச்ருண்வதாம் ந்ரூணாம் புக்திமுக்தி ப்ரதாயகம்
ஸர்வசத்ரு க்ஷயகரம் ஸ்ர்வரோக நிவாரணம்
அஷ்டைச்வர்ய ப்ரதம் நித்யம் ஸர்வலோகைக பாவனம்.

இந்த ஸ்தோத்ரம் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், இன்பத்தையும் மோக்ஷத்தையும் அருளக்கூடியது. விரோதிகளை வெற்றி கொள்ளவும், நோய் நொடிகள் அண்டாமல் அஷ்டலெக்ஷிமியின் அருளைப் பெறவும், உலகிலுள்ளோர் அனைவரையும் தூய்மைப்படுத்தும் ஸ்ரீமுருகனின் மங்களமான மூலமந்திரத்தால் ஆனது இந்த ஸ்தோத்ரம்.

சராண்யோத்பவம் ஸ்கந்தம் சரணாகத பாலகம்
ரண்யம் த்வாம் ப்ரபன்னஸ்ய தேஹி மே விபுலாம் ஸ்ரீயம்.

சரவணப் பொய்கையில் பிறந்தவரும், ஸ்கந்தனும், தன்னை சரணமடைந்தவர்களை காப்பவருமான, தாங்களை சரணடையூம் எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

ராஜராஜ ஸ்கோத்பூதம் ராஜீவாயத லோசனம்
தீச கோடி ஸெளந்தர்யம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

குபேரனைத் தோழமை கொண்ட சிவனிடத்திலிருந்து வந்தவரும், தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களையுடையவரும், கோடி மன்மதனுக்கு நிகரான அழகும் கொண்ட நீங்கள் எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

பலாரி ப்ரமுகைர் வந்த்ய: வல்லீந்த்ராணி ஸுதாபதே!
ரதாச்ரித லோகானாம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

இந்திரனுள்ளிட்ட தேவர்களால் வணங்கப்படுபவரும், வள்ளி-தேவசேனா ஆகியோரின் மணவாளனும், தன்னை அண்டியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே!, எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

நாரதாதி மஹாயோகி ஸித்தகந்தர்வ ஸேவிதம்
வவீரை: பூஜிதாங்க்ரிம் தேஹிமே விபுலாம் ச்ரியம்


நாரதர் முதலிய சிறந்த துறவிகளாலும், சித்தர்கள்-கந்தர்வர்களாலும் வணங்கப்பட்டவரும், வீரபாஹு முதலிய ஒன்பது வீரர்களால் பூஜிக்கப்பட்ட பாதத்தை உடையவருமான உம்மைச் சரணடைகிறேன். எனக்கு சகல செல்வங்களையும் அருள்வீராக.

பகவன் பார்வதீஸுநோ! ஸ்வாமின் பக்தார்திபஞ்சன!
வத் பாதாப்ஜயோர் பக்திம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

பகவானே!, பார்வதி குமாரா!, தலைவனே! பக்தர்களின் கவலைகளைப் போக்குகின்றவனே! தங்களுடைய பாத கமலங்களில் குறைவற்ற பக்தியையும், அளவற்ற செல்வத்தையும் எனக்கு அளித்துக் காக்க வேண்டும்.

ஸுதான்யம் யச: கீர்திம் அவிச்சேதம் ச ஸ்ந்ததே:
சத்ரு நாசன மத்யாசு தேஹி மே விபுலாம் ச்ரியம்

தங்கம், தான்யம், அளவற்ற புகழ், மகன்-பேரன் என்று வம்ச விருத்தி, விரோதமற்ற சுற்றம் ஆகியவற்றை இப்போழுதே எனக்கு அளித்து, செல்வத்தையும் அருள் புரிவீர்களாக!

இதம் ஷடக்ஷரம் ஸ்தோத்ரம் ஸுப்ரம்மண்யஸ்ய ஸந்ததம்
ய: படேத் தஸ்ய ஸித்யந்தி ஸ்ம்பத: சிந்திதாதிகா:

ஸ்ரீ சுப்ரமண்யருடைய இந்த மூல மந்திர ஷடக்ஷ்ர ஸ்தோதிரத்தை எப்போது யார் படிக்கின்றாரோ அவருக்கு விரும்பிய அளவுக்கும் மேலாக செல்வங்கள் கிடைக்கும்.

காமம், சினம், பேராசை, மயக்கம் (பஜ கோவிந்தம் - 26 )


காமம் க்ரோதம் லோபம் மோஹம்
த்யக்த்வாத்மானம் பாவய கோஹம்
ஆத்மஞான விஹினா மூடா
தே பச்யந்தே நரக நிகூடா:

காமம் க்ரோதம் லோபம் மோஹம் த்யக்த்வா - காமம், சினம், பேராசை, மயக்கம் இவற்றைத் துறந்துவிட்டு

ஆத்மானம் பாவய கோ அஹம் - மனத்தில் 'நான் யார்?' என்ற சிந்தனையை எப்போதும் கொள்.

ஆத்மஞான விஹினா மூடா - தன்னைப் பற்றிய அறிவு இல்லாதவர்கள் மூடர்கள்

தே பச்யந்தே நரக நிகூடா: - அவர்கள் எப்போதும் நரக வேதனையில் கட்டுப்பட்டவர்களாக (அறிவாளிகளால்) பார்க்கப் படுகிறார்கள்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.