Wednesday, May 6, 2009

நீர் மோரை விற்பதா? கோவிந்தனை விற்பதா?


'என்ன இது வாசலில் யாரோ இனிய குரலில் கோவிந்தா, தாமோதரா, மாதவா என்று கூவிக் கொண்டே செல்கிறார்களே'

"அடியே தயிர்க்காரி. தயிர்க்கலயத்தைத் தலையில் தாங்கிக் கொண்டு செல்கிறாய். ஆனால் தயிர் தயிர் என்று கூவாமல் வேறு ஏதோ பெயர் சொல்லிக் கூவுகிறாயே?"

'என்ன இது? இவள் ஒன்றும் விடை சொல்ல மாட்டேன் என்கிறாளே. இந்தப் பெண்களே இப்படித் தான். நம் அகமுடையாளும் சில நேரம் இப்படித் தான் இந்தப் பெயர்களைக் கூவிக் கொண்டிருக்கிறாள். சில நேரங்களில் ஒளபாசனத்திற்குத் (இல்லறத்தார் செய்யவேண்டிய தினசரி தீ வழிபாடு) தேவையான பொருட்களை எடுத்து வைக்காமல் இவளும் கோவிந்த தாமோதர மாதவா என்று புலம்பத் தொடங்கிவிடுகிறாள். உலகத்தில் எல்லா பெண்களுக்கும் இந்த நோய் வந்துவிட்டது போலும்'

இப்படி எண்ணிக் கொண்டே கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் கண்ணனின் பாதக்கமலங்களில் பறி கொடுக்கப்பட்ட மனத்துடன் 'கோவிந்தா தாமோதரா மாதவா' என்று கூவிக் கொண்டு நீர் மோர் விற்றுச் செல்லும் இடைப்பெண்ணைப் பார்த்துக் கொண்டே இல்லத்தினுள் செல்கிறார் அந்த வீட்டுக்கு உரியவர்.

***

விக்ரேது காமாகில கோப கன்யா
முராரி பதார்பித சித்த வ்ருத்தி
தத்யோதகம் மோஹவசாத் அவோசாத்
கோவிந்த தாமோதர மாதவேதி


ஒரு கோபகன்னிகை தன்னுடைய மனம், மெய், மொழி என்ற அனைத்தும் கண்ணனின் பாதக்கமலத்தில் அடைக்கலமாகக் கொடுத்து அந்த இன்பம் தந்த மயக்கத்தில் தன் தலையில் நீர்மோரைத் தாங்கிச் சென்றாலும் 'கோவிந்த தாமோதர மாதவா' என்று கூவிச் செல்கிறாள்.

Tuesday, April 14, 2009

ஆதித்ய ஹ்ருதயம் – 6




ஆதித்ய ஹ்ருதயத்தின் இறுதிப்பகுதி - 26 முதல் 31 வரையிலான சுலோகங்கள்:

பூஜயஸ்வைனமேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி

PuujayasvainamEkaakrO dEvadEvam jagathpathim
yEthath thrikuNitham japthvaa yuththEshu vijayishyasi



தேவதேவம் - தேவர்களுக்கும் தெய்வமானவனை

ஜகத்பதிம் - உலகத்தை உடையவனை

பூஜயஸ்வைனம் ஏகாக்ரோ - ஒரு நிலைப்பட்ட மனத்துடன் வணங்குவாய்.

ஏதத் - இந்த ஸ்தோத்திரத்தை

த்ரிகுணிதம் ஜப்த்வா - மும்முறை ஜபித்து

யுத்தேஷு - போரில்

விஜயிஷ்யஸி - வெற்றி பெறுவாய்

அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
ஏவம் உக்த்வா ததா அகஸ்த்யோ ஜகாம ச யதா கதம்

asminkshanE mahAbhAhO rAvanam thvam vadhishyasi
yEvam ukthvA thathAkaSthyO jakAma cha yathA gatham


அஸ்மின் க்ஷணே - இந்த நொடியிலேயே

மஹாபாஹோ
- பெரும் தோள்வலிமை உடையவனே

ராவணம் த்வம் வதிஷ்யஸி - இராவணனை நீ வதைப்பாய்

ஏவம் உக்த்வா - இப்படி சொல்லிவிட்டு

ததா அகஸ்த்யோ - அங்கிருந்த அகத்தியர்

ஜகாம ச யதா கதம் - எப்படி வந்தாரோ அப்படியே சென்றார்

ஏதச் ச்ருத்வா மஹாதேஜா நஷ்ட சோகோ பவத் ததா
தாரயாமாஸ சுப்ரீதோ ராகவ: ப்ரயதாத்மவாந்

yEthas sruthvA mahAthEjA nashta sOkO bhavath thadhA
dhArayamAsa suprIthO rAghava: prayathAthmavAn


ஏதச் ச்ருத்வா - இதனைக் கேட்டு (இந்த ஆதித்ய ஹ்ருதயம் என்ற ஸ்தோத்ரத்தைக் கேட்டு)

மஹாதேஜா - பெரும் வலிமையுள்ளவனும்

தாரயாமாஸ - நோக்கத்தில் உறுதியுள்ளவனும்

சுப்ரீதோ - மிகவும் மகிழ்ந்தவனும்

ராகவ: ப்ரயதாத்மவாந் - முயற்சிகளில் சிறந்தவனும் ஆன இராகவன்

நஷ்ட சோகோ பவத் ததா - அப்போதே கவலைகள் எல்லாம் நீங்கியவன் ஆனான்

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்சம் அவாப்தவாந்
த்ரிர் ஆசம்ய சுசிர்பூத்வா தநுர் ஆதாய வீர்யவாந்

Adityam prEkshya japthvA thu param harsam avApthavAn
thrirAsamya shuchir bhUthvA dhanur AthAya vIryavAn


த்ரிர் ஆசம்ய - மும்முறை ஆசமனீயம் செய்து



சுசிர்பூத்வா – சுத்தமடைந்த உடலினை அடைந்தான்



தநுர் ஆதாய - வில்லை ஏந்தியவன்



வீர்யவாந் - வீரத்தில் சிறந்தவன்



ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து - ஆதித்யனைப் பார்த்துக் கொண்டே (இந்த ஸ்தோத்ரத்தை) ஜபித்து



பரம் ஹர்சம் அவாப்தவாந் - மிகவும் மேலான மகிழ்ச்சியை அடைந்தான்

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருச்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வ யத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோபவத்

rAvanam prEkshya hrustAthmA yudhdhAya samupAgamath
sarva yathnEna mahataa vadhE thasya dhruthObhavath

ஹ்ருச்டாத்மா யுத்தாய ஸமுபாகமத் - போர் செய்யும் நோக்கத்துடன் வரும்


ராவணம் ப்ரேக்ஷ்ய - இராவணனைப் பார்த்து


ஸர்வ யத்னேன மஹதா - மேலான எல்லா முயற்சிகளுடனும்


வதே தஸ்ய த்ருதோபவத் - அவனை (இராவணனை) வதைப்பதற்கான உறுதியைக் கொண்டான் (இராகவன்).

அத ரவி ரவதந் நிரீக்ஷ்ய ராமம்
முதிதமநா பரமம் ப்ரஹ்ருஷ்யமான:
நிசிசரபதி சம்க்ஷயம் விதித்வா
சுரகண மத்யகதோ வசஸ்த்வரேதி

atha ravi ravadan nirIkshya rAmam
mudhithamanA paramam prahrishyamAna:
nishicharapatir samkshayam vidithvA
suragana madhyagatO vachastvarEti


அத - அப்போது


சுரகண மத்யகதோ - தேவர்கள் கூட்டத்தின் நடுவில் இருந்த



ரவி - சூரியன்


முதிதமநா - மிகவும் மகிழ்ந்த மனத்துடன்


பரமம் ப்ரஹ்ருஷ்யமான: - மிக உயர்ந்த திருப்தியை அடைந்தவனாக



நிசிசரபதி - இரவில் திரிபவர்களான அரக்கர்களின் தலைவனான இராவணனின்


சம்க்ஷயம் விதித்வா - அழிவு நேரம் நெருங்கி விட்டதை அறிந்து



ரவதந் நிரீக்ஷ்ய ராமம் - 'விரைவில் நடத்துவாய் இராமா'


வசஸ்த்வரேதி - என்று சொன்னான்.

இதி ச்ரிமத் ராமாயணே வால்மீகியே ஆதிகாவ்யே ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

இத்துடன் ச்ரிமத் இராமாயணத்தில் வால்மீகி இயற்றிய முதல் காவியத்தில் இருக்கும் ஆதித்ய ஹிருதயம் என்ற ஸ்தோத்திரம் நிறைவடைந்தது.

Friday, January 16, 2009

ஆதித்ய ஹ்ருதயம் - 5

ஆதித்ய ஹ்ருதயத்தின் 21 முதல் 25 வரையிலான சுலோகங்கள்:

தப்த சாமீகராபாய வஹ்னயே விஸ்வகர்மணே
நம: தமோபிநிக்னாய ருசயே லோகசாக்ஷிணே

taptha chaamiikaraabhaaya vahnayE visva karmanE
nama: thamObhinignaaya rucayE lOkasAkshinE


தப்த சாமீகராபாய - உருக்கிய பொன்னின் நிறத்தைக் கொண்டவருக்கு

வஹ்னயே - தீ வடிவானவருக்கு

விஸ்வகர்மனே - உலகத்தின் அனைத்து செயல்களையும் செய்பவருக்கு

தம அபிநிக்னாய - இருளை அழிப்பவருக்கு

ருசயே - உலகத்தில் ஒளியை எல்லாம் உடையவருக்கு

லோக சாக்ஷினே - உலகத்தில் சாட்சியாக நிற்பவருக்கு

நம: - வணக்கங்கள்.

நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஸத்யேஷ கபஸ்திபி:

nasayathyEsha vai bhuutham thadEva Srujathi prabhu:
pAyathyEsha tapathyEsha varSathyEsha gabhastibhi:

நாசயதி ஏஷ வை பூதம்: - உயிர்களை எல்லாம் இவனே அழிக்கிறான்

தத் ஏவ ஸ்ருஜதி - அவற்றை இவனே பிறப்பிக்கிறான்

ப்ரபு: - இறைவன் இவனே

பாயதி ஏஷ - இவனே காக்கிறான்

தபதி ஏஷ - இவனே வெயிலாகக் காய்கிறான்

வர்ஸதி ஏஷ - இவனே மழையாகப் பொழிகிறான்

கபஸ்திபி: தன்னுடைய ஒளி பொருந்திய கதிர்களால்

இவனே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களையும் செய்கிறான். இவனே வெயிலாகவும் மழையாகவும் இருக்கிறான்.

ஏஷ சுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஸ்டித:
ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச பலம் சைவாக்னிஹோத்ரினாம்

yEsha supthEsu jAkarthi bhUthEsu pariniStitha:
yEsha yEvAknihOthram cha phalam chaivaaknihOthrinAm

ஏஷ - இவனே

பூதேஷு - எல்லா உயிர்களிலும்

சுப்தேஷு ஜாகர்தி பரிநிஸ்டித: - அவை உறங்கும் போதும் விழிப்பாக நிலை நிற்கிறான். (அவற்றின் உயிராக நிற்கிறான்)

ஏஷ ஏவ அக்னி ஹோத்ரம் ச - இவனே தீ வழிபாட்டின் வடிவமாகவும் இருக்கிறான்

பலம் ச ஏவ அக்னி ஹோத்ரினாம் - அத்தீவழிபாட்டின் பயனாகவும் இருக்கிறான்

வேதாஸ் ச க்ரதவசைவ க்ரதூனாம் பலம் ஏவ ச
யானி க்ருத்யானி லோகேஷு சர்வ ஏஷ ரவி: ப்ரபு:

vEdASca krathavascaiva krathUnAm phalamEva ca
yAni kruthyAni lOkEshu sarva yEsha ravi: prabhu:

ச ஏவ - இவனே

வேதா: - வேதமாகவும்

க்ரத: - சடங்குகளாகவும்

க்ரதூனாம் பலம் - சடங்குகளின் பயனாகவும்

ஏவ ச - இவனே இருக்கிறான்

லோகேஷு - இவ்வுலகத்தில்

யானி க்ருத்யானி - என்ன என்ன செயல்கள் செய்யப்படுகின்றனவோ

சர்வ ஏஷ - அவை எல்லாமும் இவனே

ரவி: - ஒளி படைத்தவன்

ப்ரபு: - இறைவன்; தலைவன்

ஏனமாபத்ஸு க்ருச்ரேஷு காந்தாரேஷு பயேஷு ச
கீர்த்தயேன புருஷ: கச்சின் நாவஸீததி ராகவ:

yEnamApathSu kruchrEshu kAnthArEshu bhayEshu cha
kIrthayEna purusha: kascin nAvaSithathi rAghava:


ராகவ: - இராகவா!

ஏனம் - இவன்

க்ருச்ரேஷு ஆபத்ஸு - எல்லாவிதமான ஆபத்துகளில் இருந்தும்

காந்தாரேஷு - காடுகளிலும்

பயேஷு ச - பயமுறுத்தும் நேரங்களிலும்

கீர்த்தயேன புருஷ: - இவனைப் பாடி வழிபடுவோரை

கச்சின் - எப்போதும்

நாவஸீததி - கைவிடமாட்டான்.