Sunday, July 31, 2011

அச்யுதாஷ்டகம் - 5 & 6



அச்யுதாஷ்டகத்தின் ஐந்தாம் சுலோகம் இது.

ராக்ஷஸ க்ஷோபித: ஸீதயா சோபிதோ
தண்டகாரண்ய பூ புண்யதா காரண:
லக்ஷ்மணேனான்விதோ வானரைஸ்ஸேவிதோ
அகஸ்த்ய ஸம்பூஜீதோ ராகவ: பாது மாம்

ராக்ஷஸ க்ஷோபித:
- ராடசதர்களின் புகழை மங்கச் செய்தவன்!

ஸீதயா சோபிதோ - சீதைக்கு அணிகலன் போன்றவன்!

தண்டகாரண்ய பூ புண்யதா காரண: - தண்டகாரண்ய காட்டு நிலத்தைப் புனிதப்படுத்தியவன்!

லக்ஷ்மணேனான்விதோ - இலக்குவனனைப் பிரியாதவன்!

வானரைஸ்ஸேவிதோ - வானரங்களால் பணியப்படுபவன்!

அகஸ்த்ய ஸம்பூஜீதோ - அகத்தியரால் நன்கு பூசிக்கப்பட்டவன்!

ராகவ: - (அப்படிப்பட்ட) இரகு குலத்தில் பிறந்த இராகவன்

பாது மாம் - என்னைக் காக்கட்டும்!

இந்த சுலோகம் இராமனை மட்டுமே பாடுகிறது.

அடுத்த சுலோகம் கிருஷ்ணனை மட்டுமே பாடுகிறது.



தேநுகாரிஷ்டகானிஷ்ட க்ருத்த்வேஷிஹா
கேசிஹா கம்ஸஹ்ருத்வம்சிகாவாதக:
பூதனாகோபக: ஸுரஜாகேலனோ
பாலகோபாலக: பாது மாம் ஸர்வதா

தேநுக அரிஷ்ட கானிஷ்ட க்ருத் த்வேஷி ஹா - துவேஷம் கொண்டு வந்த தேனுகன், அரிஷ்டன் இருவரையும் கொன்றவன்!

கேசிஹா - கேசியைக் கொன்றவன்!

கம்ஸ ஹ்ருத் வம்சிகா வாதக: - கம்சனின் இதயத்திற்கு என்றும் துன்பத்தைக் கொடுத்தவன்!

பூதனாகோபக: - பூதனையைக் கோவித்துக் கொண்டவன்!

ஸுரஜாகேலனோ - குழலில் விளையாடுபவன்!

பாலகோபாலக: - (அப்படிப்பட்ட) பாலகோபாலன்

பாது மாம் ஸர்வதா - என்னை எப்போதும் காக்கட்டும்!

Thursday, July 14, 2011

அச்யுதாஷ்டகம் - 3 & 4



அச்யுதாஷ்டகத்தின் மூன்றாம் சுலோகம் இது.

விஷ்ணவே ஜிஷ்ணவே சங்கினே சக்ரிணே
ருக்மிணிராகிணே ஜானகீஜானயே
வல்லவீவல்லபாயார்சிதாயாத்மனே
கம்ஸவித்வம்ஸினே வம்சினே தே நம :

விஷ்ணவே - எங்கும் நிறைந்தவனே!

ஜிஷ்ணவே - அனைத்தையும் அனைவரையும் வென்றவனே!

சங்கினே - சங்கை ஏந்தியவனே!

சக்ரிணே - சக்கரத்தை ஏந்தியவனே!

ருக்மிணி ராகிணே - ருக்மிணி மணாளனே!

ஜானகீ ஜானயே - சீதையின் மணாளனே!

வல்லவீ வல்லபா - கோபியர்களின் காதலனே!

யார்சிதா - அருச்சிக்கப்படுபவனே!

யாத்மனே - உயிர்களுக்கு உயிரானவனே!

கம்ஸ வித்வம்ஸினே - கம்சனை வதைத்தவனே!

வம்சினே - குழல் ஊதுபவனே!

தே - உனக்கு

நம: - என் வணக்கங்கள்!



அடுத்த சுலோகம்

க்ருஷ்ண கோவிந்த ஹே ராம நாராயண
ஸ்ரீபதே வாஸுதேவாஜித ஸ்ரீநிதே
அச்யுதாநந்த ஹே மாதவாதோக்ஷஜ
த்வாரகாநாயக த்ரௌபதீரக்ஷக

க்ருஷ்ண
- கருப்பனே!

கோவிந்த - இடையனே! பசுக்களைக் காப்பவனே!

ஹே ராம - ஹே ராமா! கவர்பவனே!

நாராயண - அனைத்திலும் இருப்பவனே! அனைத்திற்கும் இருப்பிடமே!

ஸ்ரீபதே - திருமகள் மணாளனே!

வாஸுதேவ - எல்லோரிலும் வசிப்பவனே! வசுதேவ குமாரனே!

அஜித - வெல்லமுடியாதவனே!

ஸ்ரீநிதே - வைத்த மாநிதியே!

அச்யுத - நழுவாதவனே! நழுவவிடாதவனே!

அநந்த - எல்லையில்லாதவனே!

ஹே மாதவ - ஹே திருமாலே!

அதோக்ஷஜ - மறைப்பொருள் அறிவே!

த்வாரகாநாயக - துவாரகை நாதனே!

த்ரௌபதீரக்ஷக - துரௌபதியைக் காப்பவனே!

அடுத்த இரு சுலோகம் அடுத்த இடுகையில்.

Friday, July 1, 2011

அச்யுதாஷ்டகம் - 2



அச்யுதாஷ்டகத்தின் அடுத்த சுலோகம் இது.

அச்யுதம் கேசவம் ஸத்யபாமாதவம்
மாதவம் ஸ்ரீதரம் ராதிகாராதிதம்
இந்திராமந்திரம் சேதஸா ஸுந்தரம்
தேவகிநந்தனம் நந்தஜம் ஸந்ததே

அச்யுதம்
- வெல்ல முடியாதவன்! நன்னிலையைத் தருபவன்!

கேசவம் - குழலழகன்!

ஸத்யபாமாதவம் - சத்யபாமா நாயகன்!

மாதவம் - திருமகள் கேள்வன்!

ஸ்ரீதரம் - திருவாளன்! திருவைத் தாங்கியவன்! செல்வன்!

ராதிகா ராதிதம் - இராதையின் பெருவிருப்பமானவன்!

இந்திரா மந்திரம் - தாமரையாள் விளங்கும் திருகோவிலானவன்! திருமகளை மார்பில் ஏந்தியவன்!

சேதஸா ஸுந்தரம் - நெஞ்சிற்கு அழகன்! நினைத்தாலே இனிப்பவன்!

தேவகி நந்தனம் - தேவகிக்கு இனியவன்!

நந்தஜம் ஸந்ததே - அனைவருக்கும் இனியவன்!

வெல்லமுடியாதவனும், குழலழகனும், சத்யபாமையின் கணவனும், திருமகள் கேள்வனும், செல்வனும், இராதையின் மணவாளனும், தாமரையாளின் திருக்கோவிலும், நினைத்தாலே இனிப்பவனும், தேவகி மைந்தனும், அனைவருக்கும் நெருங்கியவனும் ஆன கண்ணனை போற்றுகிறேன்!






**