Sunday, July 31, 2011
அச்யுதாஷ்டகம் - 5 & 6
அச்யுதாஷ்டகத்தின் ஐந்தாம் சுலோகம் இது.
ராக்ஷஸ க்ஷோபித: ஸீதயா சோபிதோ
தண்டகாரண்ய பூ புண்யதா காரண:
லக்ஷ்மணேனான்விதோ வானரைஸ்ஸேவிதோ
அகஸ்த்ய ஸம்பூஜீதோ ராகவ: பாது மாம்
ராக்ஷஸ க்ஷோபித: - ராடசதர்களின் புகழை மங்கச் செய்தவன்!
ஸீதயா சோபிதோ - சீதைக்கு அணிகலன் போன்றவன்!
தண்டகாரண்ய பூ புண்யதா காரண: - தண்டகாரண்ய காட்டு நிலத்தைப் புனிதப்படுத்தியவன்!
லக்ஷ்மணேனான்விதோ - இலக்குவனனைப் பிரியாதவன்!
வானரைஸ்ஸேவிதோ - வானரங்களால் பணியப்படுபவன்!
அகஸ்த்ய ஸம்பூஜீதோ - அகத்தியரால் நன்கு பூசிக்கப்பட்டவன்!
ராகவ: - (அப்படிப்பட்ட) இரகு குலத்தில் பிறந்த இராகவன்
பாது மாம் - என்னைக் காக்கட்டும்!
இந்த சுலோகம் இராமனை மட்டுமே பாடுகிறது.
அடுத்த சுலோகம் கிருஷ்ணனை மட்டுமே பாடுகிறது.
தேநுகாரிஷ்டகானிஷ்ட க்ருத்த்வேஷிஹா
கேசிஹா கம்ஸஹ்ருத்வம்சிகாவாதக:
பூதனாகோபக: ஸுரஜாகேலனோ
பாலகோபாலக: பாது மாம் ஸர்வதா
தேநுக அரிஷ்ட கானிஷ்ட க்ருத் த்வேஷி ஹா - துவேஷம் கொண்டு வந்த தேனுகன், அரிஷ்டன் இருவரையும் கொன்றவன்!
கேசிஹா - கேசியைக் கொன்றவன்!
கம்ஸ ஹ்ருத் வம்சிகா வாதக: - கம்சனின் இதயத்திற்கு என்றும் துன்பத்தைக் கொடுத்தவன்!
பூதனாகோபக: - பூதனையைக் கோவித்துக் கொண்டவன்!
ஸுரஜாகேலனோ - குழலில் விளையாடுபவன்!
பாலகோபாலக: - (அப்படிப்பட்ட) பாலகோபாலன்
பாது மாம் ஸர்வதா - என்னை எப்போதும் காக்கட்டும்!
Labels:
Vishnu,
அச்யுதாஷ்டகம்,
திருமால்
Thursday, July 14, 2011
அச்யுதாஷ்டகம் - 3 & 4
அச்யுதாஷ்டகத்தின் மூன்றாம் சுலோகம் இது.
விஷ்ணவே ஜிஷ்ணவே சங்கினே சக்ரிணே
ருக்மிணிராகிணே ஜானகீஜானயே
வல்லவீவல்லபாயார்சிதாயாத்மனே
கம்ஸவித்வம்ஸினே வம்சினே தே நம :
விஷ்ணவே - எங்கும் நிறைந்தவனே!
ஜிஷ்ணவே - அனைத்தையும் அனைவரையும் வென்றவனே!
சங்கினே - சங்கை ஏந்தியவனே!
சக்ரிணே - சக்கரத்தை ஏந்தியவனே!
ருக்மிணி ராகிணே - ருக்மிணி மணாளனே!
ஜானகீ ஜானயே - சீதையின் மணாளனே!
வல்லவீ வல்லபா - கோபியர்களின் காதலனே!
யார்சிதா - அருச்சிக்கப்படுபவனே!
யாத்மனே - உயிர்களுக்கு உயிரானவனே!
கம்ஸ வித்வம்ஸினே - கம்சனை வதைத்தவனே!
வம்சினே - குழல் ஊதுபவனே!
தே - உனக்கு
நம: - என் வணக்கங்கள்!
அடுத்த சுலோகம்
க்ருஷ்ண கோவிந்த ஹே ராம நாராயண
ஸ்ரீபதே வாஸுதேவாஜித ஸ்ரீநிதே
அச்யுதாநந்த ஹே மாதவாதோக்ஷஜ
த்வாரகாநாயக த்ரௌபதீரக்ஷக
க்ருஷ்ண - கருப்பனே!
கோவிந்த - இடையனே! பசுக்களைக் காப்பவனே!
ஹே ராம - ஹே ராமா! கவர்பவனே!
நாராயண - அனைத்திலும் இருப்பவனே! அனைத்திற்கும் இருப்பிடமே!
ஸ்ரீபதே - திருமகள் மணாளனே!
வாஸுதேவ - எல்லோரிலும் வசிப்பவனே! வசுதேவ குமாரனே!
அஜித - வெல்லமுடியாதவனே!
ஸ்ரீநிதே - வைத்த மாநிதியே!
அச்யுத - நழுவாதவனே! நழுவவிடாதவனே!
அநந்த - எல்லையில்லாதவனே!
ஹே மாதவ - ஹே திருமாலே!
அதோக்ஷஜ - மறைப்பொருள் அறிவே!
த்வாரகாநாயக - துவாரகை நாதனே!
த்ரௌபதீரக்ஷக - துரௌபதியைக் காப்பவனே!
அடுத்த இரு சுலோகம் அடுத்த இடுகையில்.
Labels:
Vishnu,
அச்யுதாஷ்டகம்,
திருமால்
Friday, July 1, 2011
அச்யுதாஷ்டகம் - 2
அச்யுதாஷ்டகத்தின் அடுத்த சுலோகம் இது.
அச்யுதம் கேசவம் ஸத்யபாமாதவம்
மாதவம் ஸ்ரீதரம் ராதிகாராதிதம்
இந்திராமந்திரம் சேதஸா ஸுந்தரம்
தேவகிநந்தனம் நந்தஜம் ஸந்ததே
அச்யுதம் - வெல்ல முடியாதவன்! நன்னிலையைத் தருபவன்!
கேசவம் - குழலழகன்!
ஸத்யபாமாதவம் - சத்யபாமா நாயகன்!
மாதவம் - திருமகள் கேள்வன்!
ஸ்ரீதரம் - திருவாளன்! திருவைத் தாங்கியவன்! செல்வன்!
ராதிகா ராதிதம் - இராதையின் பெருவிருப்பமானவன்!
இந்திரா மந்திரம் - தாமரையாள் விளங்கும் திருகோவிலானவன்! திருமகளை மார்பில் ஏந்தியவன்!
சேதஸா ஸுந்தரம் - நெஞ்சிற்கு அழகன்! நினைத்தாலே இனிப்பவன்!
தேவகி நந்தனம் - தேவகிக்கு இனியவன்!
நந்தஜம் ஸந்ததே - அனைவருக்கும் இனியவன்!
வெல்லமுடியாதவனும், குழலழகனும், சத்யபாமையின் கணவனும், திருமகள் கேள்வனும், செல்வனும், இராதையின் மணவாளனும், தாமரையாளின் திருக்கோவிலும், நினைத்தாலே இனிப்பவனும், தேவகி மைந்தனும், அனைவருக்கும் நெருங்கியவனும் ஆன கண்ணனை போற்றுகிறேன்!
**
Labels:
Vishnu,
அச்யுதாஷ்டகம்,
திருமால்
Subscribe to:
Posts (Atom)