Friday, May 30, 2008

பாலனாய் விளையாட்டு; இளமையில் காதல்; முதுமையில் கவலை; என்ன தான் செய்வது? (பஜ கோவிந்தம் 7)


பாலஸ்தாவத் க்ரீடா சக்த:
தருணஸ்தாவத் தருணீ சக்த:
வ்ருத்தஸ்தாவத் சிந்தா சக்த:
பரே ப்ரஹ்மணி கோபி ந சக்த:

பாலஸ்தாவத் க்ரீடா சக்த: - சிறு வயதிலோ விளையாட்டுச் செயல்களிலேயே ஒவ்வொருவரும் மூழ்கிப் போகின்றனர்.

தருணஸ்தாவத் தருணீ சக்த: - பருவ வயதிலோ இனக்கவர்ச்சியிலேயே மனமெல்லாம் இருக்கிறது.

வ்ருத்தஸ்தாவத் சிந்தா சக்த: - முதுமைக்காலத்திலோ எத்தனையோ கவலைகள்.

பரே ப்ரஹ்மணி கோபி ந சக்த: - ஐயோ! பரம்பொருளைப் பற்றி எண்ண ஒருவருக்கும் தமது வாழ்க்கையில் நேரமே இல்லையே?

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Saturday, May 24, 2008

கட்டிக்கொண்டவளும் பயந்து விலகுவாள் (பஜ கோவிந்தம் 6)

யாவத் பவனோ நிவசதி தேஹே
தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே
கதவதி வாயௌ தேஹாபாயே
பார்யா பிப்யதி தஸ்மின் காயே

யாவத் பவனோ நிவசதி தேஹே - எது வரையில் உடம்பில் மூச்சுக் காற்று இருக்கிறதோ

தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே - அது வரையில் தான் உன் வீட்டில் இருப்பவர்கள் உன் நலன்களைப் பற்றி விசாரிப்பார்கள்.

கதவதி வாயௌ தேஹாபாயே - உடலை விட்டு அந்த மூச்சுக் காற்று போன பின்னால்

பார்யா பிப்யதி தஸ்மின் காயே - இது நாள் வரை பல முறை அந்த உடலுடன் கூடி வாழ்ந்த மனைவியும் அந்த உயிரற்ற உடலைக் கண்டு பயப்படுவாள்.

கோவிந்தனை வணங்குங்கள்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Saturday, May 17, 2008

லிங்காஷ்டகம் முழுதும்


ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம் - நான்முகப் பிரம்மனாலும் முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும் எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப் பட்ட லிங்கம்

நிர்மல பாஸித ஸோபித லிங்கம் - குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்

ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் - பிறப்பு இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.

***

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப வினாஷன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம் - தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்

காம தஹன கருணாகர லிங்கம் - மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம்

ராவண தர்ப வினாஷன லிங்கம் - இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

***

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
சித்த சுராசுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம் - எல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம்

புத்தி விவர்த்தன காரண லிங்கம் - உண்மையறிவு அடையக் காரணமாக இருக்கும் லிங்கம்

சித்த சுராசுர வந்தித லிங்கம் - சித்தர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

***

கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

கனக மஹாமணி பூஷித லிங்கம் - பொன்னாலும் மிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழகு செய்யப்பெற்ற லிங்கம்

பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம் - நாகங்களின் அரசனை அணிந்து ஒளிவீசும் லிங்கம்

தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம் - தனக்குரிய மரியாதையைத் தரத் தவறிய தக்ஷப் பிரஜாபதியின் யாகத்தை அழித்த லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

***

குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லேபித லிங்கம் - குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப் பட்ட லிங்கம்

பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம் - தாமரை மலர் மாலை அணிந்து ஒளிவீசும் லிங்கம்

ஸஞ்சித பாப விநாசன லிங்கம் - பற்பல பிறப்புகளில் சேர்த்து வைத்த எல்லா வினைகளின் பயன்களையும் அழிக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

***

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் - தேவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சேவைகள் செய்யப்பட்டும் விளங்கும் லிங்கம்

பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம் - உணர்வுடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம்

தினகர கோடி ப்ரபாகர லிங்கம் - கோடி சூரியன்களின் ஒளியினைத் கொண்டிருக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

***

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் - எட்டிதழ் தாமரையால் சூழப்பட்ட லிங்கம்

ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் - எல்லாவிதமான செல்வங்களுக்கும் காரணமான லிங்கம்

அஷ்ட தரித்ர விநாசன லிங்கம் - எட்டுவிதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

***

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் - தேவ குருவாலும் தேவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம்.

ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம் - தேவலோக நந்தவன மலர்களால் எப்போதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்.

பராத்பரம் பரமாத்மக லிங்கம் - பெரியதிலும் பெரியதான, பரமாத்ம உருவான லிங்கம்.

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

***

லிங்காஷ்டகம் இதம் புண்யம்
யே படேத் சிவ சன்னிதௌ
சிவலோகம் அவாப்நோதி
சிவே ந ஸஹமோததே

லிங்காஷ்டகம் இதம் புண்யம் - இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது

யே படேத் சிவ சன்னிதௌ - இதனை சிவ சன்னிதானத்தில் படித்தால்

சிவலோகம் அவாப்நோதி - சிவலோகம் கிடைக்கும்

சிவே ந ஸஹமோததே - சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்.

***

நாமக்கல் சிபியின் வேண்டுகோளின் படி லிங்காஷ்டகம் முழுவதும் இந்தப் பதிவில் கொடுத்திருக்கிறேன். இந்தப் பாடலை சூலமங்கலம் சகோதரிகள் பாடியுள்ளதை இங்கே கேட்கலாம். எஸ்.பி.பி பாடியது இங்கே கேட்கலாம்.

Friday, May 16, 2008

சிவனுடன் தோழமை வேண்டுமா? (லிங்காஷ்டகம் 8 & பயன்)


ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் - தேவ குருவாலும் தேவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம். (முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றாலும் அவர்களில் சிறந்தவர்களாக இந்திரன், வருணன், யமன், அக்னி, வாயு, அஸ்வினி தேவர்கள், சூரியன், சந்திரன் என்று சிலரையே சொல்வார்கள். புராணங்களில் தேவர்களின் பிரதிநிதிகளாக இந்த தேவர்களையே காட்டியிருப்பார்கள். அவர்களாலேயே வணங்கப்பட்ட லிங்கம் எனும்போது எல்லா தேவர்களாலும் வணங்கப்பட்ட லிங்கம் என்று அறியக் கிடைக்கிறது. தேவர்களும் தங்கள் குருவான தேவகுரு பிருகஸ்பதி காட்டிய வழியிலேயே சிவபூஜை செய்கின்றனர். அதனால் சுரகுரு சுரவர என்று தேவகுருவை முதலில் இந்தப் பாடலில் குறித்திருக்கின்றனர். )

ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம் - தேவலோக நந்தவன மலர்களால் எப்போதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம். (பூவுலகில் உள்ளவர்கள் எட்டுவிதமான மலர்களாலும் எட்டிதழ் தாமரையாலும் அர்ச்சிக்க தேவலோகத்தவர்கள் தேவலோக மலர்களை இட்டு அர்ச்சிப்பது தானே இயற்கை. அது தான் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. தேவலோக மலர்களான பாரிஜாத மலர்கள் கொண்டு எப்போதும் அர்ச்சிக்கப் படும் லிங்கம்)

பராத்பரம் பரமாத்மக லிங்கம் - பெரியதிலும் பெரியதான, பரமாத்ம உருவான லிங்கம். (லிங்க உருவில் இருக்கும் இறைவன் முதலும் முடிவும் இல்லாதவன். லிங்க உருவத்திற்கும் இது முதல்; இது முடிவு என்று எந்தப் பகுதியையும் சுட்டிக் காட்ட முடியாது. அது போல் அணுவிற்கும் அணுவாகவும் அப்பாலுக்கும் அப்பாலாகவும் உள்ளவன் அவன். பெரிதிலும் பெரியன். சிறிதிலும் சிறியன். எல்லாமே அவனுள் அடக்கம். அவன் எல்லாவற்றிலும் அடக்கம். எல்லா உயிர்களும் அவனுள் அடக்கம். அவன் எல்லா உயிர்களிலும் அடக்கம். என்னுள் தன்னையும் தன்னுள் என்னையும் காண்பவன் ஞானி என்றே கீதாசார்யனும் கூறுகிறான். )

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

***

லிங்காஷ்டகம் இதம் புண்யம்
யே படேத் சிவ சன்னிதௌ
சிவலோகம் அவாப்நோதி
சிவே ந ஸஹமோததே

லிங்காஷ்டகம் இதம் புண்யம் - இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது

யே படேத் சிவ சன்னிதௌ - இதனை சிவ சன்னிதானத்தில் படித்தால்

சிவலோகம் அவாப்நோதி - சிவலோகம் கிடைக்கும்

சிவே ந ஸஹமோததே - சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்.

எங்கும் நிறைந்தவன் அவன். அதனால் எல்லா இடங்களும் சிவ சன்னிதானமே. அதனால் எந்த இடத்தில் இந்த எட்டுப் பாடல்களையும் பாடி மகிழ்ந்து அவனையும் மகிழ்விக்கலாம்.

இத்துடன் லிங்காஷ்டகம் என்னும் எட்டு சுலோகங்கள் கொண்ட இந்த ஸ்தோத்ரம் நிறைவுற்றது.

சிவார்ப்பணம்.

Wednesday, May 7, 2008

நடுக்கம் வந்த பின் நலம் விசாரிக்கவும் நாதி இல்லை (பஜகோவிந்தம் 5)

யாவத் வித்தோ பார்ஜன சக்த:
தாவன் நிஜ பரிவாரோ ரக்த:
பஸ்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோபி ந ப்ருச்சதி கேஹே

யாவத் வித்தோ பார்ஜன சக்த: - எது வரை பொருள் சம்பாதிக்கும் வலிமை இருக்கிறதோ

தாவன் நிஜ பரிவாரோ ரக்த: - அது வரை தான் உறவும் நட்பும் நம்மிடம் அன்பும் பற்றும் கொண்டு இருக்கும்

பஸ்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே - பின்னர் வலிவிழந்த நடுங்கும் முதிர்ந்த உடலுடன் வாழும் போது

வார்த்தாம் கோபி ந ப்ருச்சதி கேஹே - நம் வீட்டில் நம்மை அண்டி வாழ்ந்தவர் கூட நாம் எப்படி இருக்கிறோம் என்று கவலைப்பட மாட்டார்கள்.

கோவிந்தனை வணங்குங்கள்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Tuesday, May 6, 2008

கோடி சூரியன்களைக் கண்டதுண்டா? (லிங்காஷ்டகம் 6 & 7)


தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் - தேவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சேவைகள் செய்யப்பட்டும் விளங்கும் லிங்கம்

பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம் - பாவத்துடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம்

தினகர கோடி ப்ரபாகர லிங்கம் - கோடி சூரியன்களின் ஒளியினைத் தோற்றுவிக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

***

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் - எட்டுவிதமான மலர்களால் சூழப்பட்ட லிங்கம்

ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் - எல்லாவிதமான செல்வங்களுக்கும் காரணமான லிங்கம்

அஷ்ட தரித்ர விநாசன லிங்கம் - எட்டுவிதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

Saturday, May 3, 2008

தாமரை இலை மேல் நீரைப் போல் நிலையற்றது வாழ்க்கை (பஜ கோவிந்தம் 4)


நளிநீ தள கத ஜலம் அதிதரளம்
தத்வத் ஜீவிதம் அதிசய சபலம்
வித்தி வ்யாத்யபிமானக்ரஸ்தம்
லோகம் சோகஹதம் ச சமஸ்தம்

நளிநீ தள கத ஜலம் - தாமரை இலையில் தங்கி இருக்கும் நீரானது

அதிதரளம் - நிலையில்லாதது.

தத்வத் - அது போல

ஜீவிதம் - வாழ்க்கையும்

அதிசய சபலம் - மிகவும் நிலையில்லாதது

லோகம் ஸமஸ்தம் - இந்த உலகில் எல்லாமும் எல்லாரும்

வ்யாதி அபிமான க்ரஸ்தம் - வியாதியாலும் தற்பெருமையாலும் விழுங்கப்பட்டவர்கள்

- மேலும்

சோக ஹதம் - (அந்த வியாதியாலும் தற்பெருமையாலும் ஏற்படும்) சோகத்தால் அழிக்கப்பட்டவர்கள்

வித்தி - இதை நீ அறிவாய்.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்.

***

முதல் பகுதி 26 அக்டோபர் 2006 அன்று இடப்பட்டது. இரண்டாம் பகுதி 3 மே 2008 அன்று சேர்க்கப்பட்டது:

தாமரை இலை மேல் தத்தளிக்கும் நீரை இரண்டுவிதமாக உவமித்திருக்கிறார்கள் மூத்தோர். தாமரை இலை மேல் நீர் எப்படி இலையுடன் ஒட்டாமல் இருக்குமோ அது போல் பற்றின்றி இருக்க வேண்டும் என்று சில இடங்களில் சொல்லியிருக்கிறார்கள். அதே உவமையை நிலையில்லாத வாழ்க்கைக்கு உவமையாக ஆதிசங்கரர் இங்கே கூறுகிறார். கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் அது எவ்வளவு உண்மை என்பது தெரிகிறது. இறப்பு எந்த வகையில் எப்போது வரும் என்று சொல்ல முடியாதபடி தானே இருக்கிறது. நெருநல் இருந்தார் இன்றில்லை - நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை என்று வள்ளுவப் பெருந்தகையும் இந்த உலக வாழ்க்கையைப் பற்றி சொல்கிறாரே. அந்த வகையில் பார்த்தால் தாமரை இலையின் மேல் தத்தளிக்கும் நீர்த்துளி வாழ்க்கைக்கு ஒரு சிறந்த உவமை.

இதனைச் சொன்னவர் ஆதிசங்கரர் என்பதால் அவருடைய தத்துவமான அத்வைதமும் இங்கே கொஞ்சம் வருகிறதோ என்று தோன்றுகிறது. தாமரை இலையின் மேல் தத்தளிக்கும் நீர்த்துளி தனி நீராகத் தோன்றினாலும் குளத்தில் இருக்கும் நீரும் அந்த நீர்த்துளியும் ஒன்றே. இலையிலிருந்து விடுதலை பெற்ற பின்னர் அந்த நீர்த்துளி குளத்தில் இருக்கும் நீருடன் கலந்து தனது தனித்தன்மையை இழந்துவிடும். முக்தியெனும் விடுதலையைப் பெறும் சீவனும் அந்த வகையில் பரம் எனும் எங்கும் நிறை இறையுடன் கலந்து தன் தனித்தன்மையை இழக்கும். அல்லிருமை (அத்வைதம்) தத்துவம் சொல்வதை இங்கே குறிப்பாகச் சொல்லுகிறாரோ என்று தோன்றுகிறது.

அடுத்து மிக முக்கியமான இரண்டு குறைகளைச் சொல்கிறார். வியாதி, அபிமானம் - நோயும் தற்பெருமையும் என்று இரண்டையும் அடுத்தடுத்து சொல்வதால் தற்பெருமையும் ஒரு பெரும் நோய். அது வாழ்க்கையை அழித்துவிடும் என்று சொல்லாமல் சொல்கிறார் என்று தோன்றுகிறது.

உலகில் எல்லோரும் 'சோகத்தால் அழிக்கப்பட்டவர்கள்' என்று இறந்த காலத்தில் சொல்வதும் சுவையாக இருக்கிறது. அது முடிந்த முடிபாகவே சொல்கிறார் சங்கரர். சோகத்திலிருந்து தப்பியவர் யாரும் இல்லை என்பதால் அப்படிச் சொன்னாரோ என்று தோன்றுகிறது.

Friday, May 2, 2008

வினைப்பயன்களா? அப்படியென்றால்? வேரறுத்துவிடும் இந்த லிங்கம் (லிங்காஷ்டகம் 4 & 5)


கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

கனக மஹாமணி பூஷித லிங்கம் - பொன்னாலும் மிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழகு செய்யப்பெற்ற லிங்கம்

பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம் - நாகங்களின் அரசனை அணிந்து ஒளிவீசும் லிங்கம்

தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம் - தனக்குரிய மரியாதையைத் தரத் தவறிய தக்ஷப் பிரஜாபதியின் யாகத்தை அழித்த லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

***

குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லேபித லிங்கம் - குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப் பட்ட லிங்கம்

பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம் - தாமரை மலர் மாலை அணிந்து ஒளிவீசும் லிங்கம்

ஸஞ்சித பாப விநாசன லிங்கம் - பற்பல பிறப்புகளில் சேர்த்து வைத்த எல்லா வினைகளின் பயன்களையும் அழிக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்