Monday, August 29, 2011

அச்யுதாஷ்டகம் - 7 & 8



வித்யுதுத்யோ தவத்ப்ரஸ் புரத்வாஸஸம்
ப்ராவ்ருடம்போதவத்ப்ரோல்லஸத்விக்ரஹம்
வன்யயா மாலயா சோபிதோர: ஸ்தலம்
லோஹிதாங்க்ரித்வயம் வாரிஜாக்ஷம் பஜே

வித்யுதுத் யோதவத் ப்ரஸ்புரத் வாஸஸம் - மின்னலைப் போல் ஒளி வீசும் மஞ்சள் பட்டாடை (பீதாம்பரம்) அணிந்தவன்!

ப்ராவ்ருடம் போதவத் ப்ரோல்லஸத் விக்ரஹம் - மழைக்காலத்து மேகம் போல் அழகுடன் திகழும் திருமேனி உடையவன்!

வன்யயா மாலயா சோபிதோ ர:ஸ்தலம் - காட்டு மலர் மாலையால் (வனமாலையால்) நன்கு விளங்கும் திருமார்பை உடையவன்!

லோஹித அங்க்ரி த்வயம் - பொன் போல் சிவந்த இரு திருவடிகளை உடையவன்!

வாரிஜாக்ஷம் - தாமரைக் கண்ணன்!

பஜே - அவனைப் போற்றுகிறேன்!




குஞ்சிதை : குந்தலைர் ப்ராஜமானானனம்
ரத்னமௌலிம் லஸத்குண்டலம் கண்டயோ:
ஹாரகேயூரகம் கங்கணப்ரோஜ்ஜவலம்
கிங்கிணிமஞ்ஜுலம் ச்யாமலம் தம் பஜே


குஞ்சிதை : குந்தலைர் ப்ராஜமானானனம் - சுருண்ட அழகிய தலைமுடியால் சூழப்பட்ட திருமுகத்தை உடையவன்!

ரத்ன மௌலிம் - இரத்தின திருமுடியை அணிந்தவன்!

லஸத்குண்டலம் - ஒளிவீசும் குண்டலங்களை அணிந்தவன்!

கண்டயோ: ஹார - கழுத்தில் பொன்னிழைகள் அணிந்தவன்!

கேயூரகம் கங்கண ப்ரோஜ்ஜவலம் - கேயூரம், கங்கணங்களால் விளங்கும் தோள்களும் கைகளும் உடையவன்!

கிங்கிணி மஞ்ஜுலம் - இனிய ஒலி எழுப்பும் கிங்கிணிகள் அணிந்தவன்!

ச்யாமலம் தம் பஜே - அந்த மேகவண்ண சியாமளனை வணங்குகிறேன்!