Friday, July 1, 2011

அச்யுதாஷ்டகம் - 2



அச்யுதாஷ்டகத்தின் அடுத்த சுலோகம் இது.

அச்யுதம் கேசவம் ஸத்யபாமாதவம்
மாதவம் ஸ்ரீதரம் ராதிகாராதிதம்
இந்திராமந்திரம் சேதஸா ஸுந்தரம்
தேவகிநந்தனம் நந்தஜம் ஸந்ததே

அச்யுதம்
- வெல்ல முடியாதவன்! நன்னிலையைத் தருபவன்!

கேசவம் - குழலழகன்!

ஸத்யபாமாதவம் - சத்யபாமா நாயகன்!

மாதவம் - திருமகள் கேள்வன்!

ஸ்ரீதரம் - திருவாளன்! திருவைத் தாங்கியவன்! செல்வன்!

ராதிகா ராதிதம் - இராதையின் பெருவிருப்பமானவன்!

இந்திரா மந்திரம் - தாமரையாள் விளங்கும் திருகோவிலானவன்! திருமகளை மார்பில் ஏந்தியவன்!

சேதஸா ஸுந்தரம் - நெஞ்சிற்கு அழகன்! நினைத்தாலே இனிப்பவன்!

தேவகி நந்தனம் - தேவகிக்கு இனியவன்!

நந்தஜம் ஸந்ததே - அனைவருக்கும் இனியவன்!

வெல்லமுடியாதவனும், குழலழகனும், சத்யபாமையின் கணவனும், திருமகள் கேள்வனும், செல்வனும், இராதையின் மணவாளனும், தாமரையாளின் திருக்கோவிலும், நினைத்தாலே இனிப்பவனும், தேவகி மைந்தனும், அனைவருக்கும் நெருங்கியவனும் ஆன கண்ணனை போற்றுகிறேன்!






**

No comments: