
அச்யுதாஷ்டகத்தின் அடுத்த சுலோகம் இது.
அச்யுதம் கேசவம் ஸத்யபாமாதவம்
மாதவம் ஸ்ரீதரம் ராதிகாராதிதம்
இந்திராமந்திரம் சேதஸா ஸுந்தரம்
தேவகிநந்தனம் நந்தஜம் ஸந்ததே
அச்யுதம் - வெல்ல முடியாதவன்! நன்னிலையைத் தருபவன்!
கேசவம் - குழலழகன்!
ஸத்யபாமாதவம் - சத்யபாமா நாயகன்!
மாதவம் - திருமகள் கேள்வன்!
ஸ்ரீதரம் - திருவாளன்! திருவைத் தாங்கியவன்! செல்வன்!
ராதிகா ராதிதம் - இராதையின் பெருவிருப்பமானவன்!
இந்திரா மந்திரம் - தாமரையாள் விளங்கும் திருகோவிலானவன்! திருமகளை மார்பில் ஏந்தியவன்!
சேதஸா ஸுந்தரம் - நெஞ்சிற்கு அழகன்! நினைத்தாலே இனிப்பவன்!
தேவகி நந்தனம் - தேவகிக்கு இனியவன்!
நந்தஜம் ஸந்ததே - அனைவருக்கும் இனியவன்!
வெல்லமுடியாதவனும், குழலழகனும், சத்யபாமையின் கணவனும், திருமகள் கேள்வனும், செல்வனும், இராதையின் மணவாளனும், தாமரையாளின் திருக்கோவிலும், நினைத்தாலே இனிப்பவனும், தேவகி மைந்தனும், அனைவருக்கும் நெருங்கியவனும் ஆன கண்ணனை போற்றுகிறேன்!
**
No comments:
Post a Comment