
என்னுடைய தினசரி காலை வழிபாட்டில் சொல்லும் இரு சுலோகங்களும் சாயி காயத்ரி மந்திரங்களும்...
ஹ்ருதாகாசே சதா பாந்தம் சாந்தம் ஆனந்த ரூபினம்
ஞானபானும் அஹம் வந்தே ஸத்குரும் ஸத்ய ஸாயினம்
இதய ஆகாயத்தில் என்றும் இருப்பவரும், அமைதியும் மகிழ்ச்சியுமே வடிவானவரும், ஞானசூரியனும் ஆன ஸத்குரு ஸத்ய ஸாயியை நான் வணங்குகிறேன்.
ஈஸ்வராம்பா ப்ரிய ஸுதம் ஈப்ஸிதார்த்த ப்ரதாயகம்
ஈஸ்வரம் ஸர்வ லோகானாம் ஸாயிம் வந்தே ஜகத்குரும்
ஈஸ்வராம்பாவின் அன்பு மகனும், விரும்பும் பொருட்களை அருளுபவனும், எல்லா உலகங்களுக்கும் இறைவனும் ஆன ஜகத்குரு ஸாயியை வணங்குகிறேன்.
ஓம் ஸாயீஷ்வராய வித்மஹே
ஸத்யதேவாய தீமஹி
தன்ன: சர்வ ப்ரசோதயாத்
ஓம் ஸாயீஷ்வரனை அறிகிறேன்!
ஸத்யதேவனை தியானிக்கிறேன்!
அதில் எல்லாமும் ஆனவன் என்னை ஈடுபடுத்தட்டும்!
ஓம் ஸாயிராமாய வித்மஹே
ஆத்மாராமாய தீமஹி
தன்னோ பாபா ப்ரசோதயாத்
ஓம் ஸாயிராமனை அறிகிறேன்!
ஆத்மாராமனை தியானிக்கிறேன்!
அதில் பாபா என்னை ஈடுபடுத்தட்டும்!