Showing posts with label பஜகோவிந்தம். Show all posts
Showing posts with label பஜகோவிந்தம். Show all posts

Monday, July 21, 2008

குருவின் திருப்பாதக் கமலங்களில்...


குரு சரணாம்புஜ நிர்பர பக்த:
சம்சாராத் அசிராத் பவ முக்த:
சேந்த்ரிய மானச நியமாத் ஏவம்
த்ரக்ஸ்யசி நிஜஹ்ருதயஸ்தம் தேவம்

குரு சரண அம்புஜ நிர்பர பக்த: - குருவின் திருப்பாதக் கமலங்களில் உன் பாரங்களையெல்லாம் முழுவதுமாக இட்டு பக்தியுடன் இருந்தால்

சம்சாராத் அசிராத் பவ முக்த: - பிறப்பு இறப்பு என்ற சம்சார சுழலிலிருந்து விரைவிலேயே விடுதலை பெறுவாய்.

ச இந்த்ரிய மானச நியமாத் ஏவம் - புலனகள், மனது இவற்றை தகுந்த வழியில் செலுத்துவதன் மூலம்

த்ரக்ஸ்யசி நிஜஹ்ருதயஸ்தம் தேவம் - இருதயத்தில் நிலைத்து நிற்கும் இறைவனை நேரடியாக தரிசிக்கலாம்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Saturday, July 19, 2008

மிக்கக் கவனத்துடன் செய்ய வேண்டிய செயல்கள்


ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
நித்யாநித்ய விவேக விசாரம்
ஜாப்யாசமேத சமாதி விதானம்
குர்வவதானம் மஹதவதானம்

ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம் - மூச்சின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது; புலன்களை அதன் வழியிலேயே செல்லாமல் தடுப்பது

நித்ய அநித்ய விவேக விசாரம் - நிலையானது எது, நிலையற்றது எது என்ற பகுத்தறிவினைப் பெறத் தனக்குள் தானே கேள்விகள் கேட்டுக் கொள்வது

ஜாப்யாசமேத சமாதி விதானம் - இறைவனின் திருநாமங்களின் ஜபத்துடன் கூடிய மனசமநிலையை (சமாதியை) அடைவது.

குரு அவதானம் மஹத் அவதானம் - மிக்கக் கவனத்துடன் செய்ய வேண்டிய செயல்கள் இவை.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Wednesday, July 16, 2008

பெற்ற பிள்ளையிடம் கூட பணம் படைத்தவனுக்கு பயம்


அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத் சுக லேச: சத்யம்
புத்ராதபி தன பாஜாம் பீதி:
சர்வத்ரைசா விஹிதா ரீதி:


அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம் - பொருள் பொருளற்றதாய் எப்போதும் சிந்தனை செய்வீர்கள்.

நாஸ்தி தத் சுக லேச: சத்யம் - உண்மையைச் சொன்னால் அதில் சிறிதளவும் சுகம் இல்லை.

புத்ராதபி தன பாஜாம் பீதி: - பெற்ற பிள்ளையிடம் கூட பணம் படைத்தவனுக்கு பயம் உண்டு.

சர்வத்ரைசா விஹிதா ரீதி: - எங்கும் இதே நியதியாக இருக்கிறது.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Sunday, July 13, 2008

பாவ நடத்தையுடன் கூடிய வாழ்க்கையை யாரும் விடுவதில்லை


சுகத: க்ரியதே ராமாபோக:
பஸ்சாதந்த சரீரே ரோக:
யத்யபி லோகே மரணம் சரணம்
ததபி ந முஞ்சதி பாபாசரணம்

சுகத: க்ரியதே ராமாபோக: - (ஒருவன்) மிக்க சுகத்துடன் (எந்தக் கவலையும் இன்றி இயன்றவரை) புலனின்பங்களில் ஆழ்ந்து போகிறான்.

பஸ்சாத் அந்த சரீரே ரோக: - பின்னர் இறுதிக் காலத்தில் அதனால் உடலில் நோய்களைப் பெறுகிறான்.

யத்யபி லோகே மரணம் சரணம் - இந்த உலகத்தில் எல்லோருக்கும் மரணம் மட்டுமே ஒரே கதி என்பதை அறிந்திருந்த போதும்

ததபி ந முஞ்சதி பாப ஆசரணம் - பாவ நடத்தையுடன் கூடிய வாழ்க்கையை யாரும் விடுவதில்லை.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Wednesday, July 9, 2008

பாடப்பட வேண்டியவை கீதையும் இறைவனின் ஆயிரம் நாமங்களும்


கேயம் கீதா நாம சஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம்
நேயம் ஸஜ்ஜன சங்கே சித்தம்
தேயம் தீன ஜனாய ச வித்தம்

கேயம் கீதா நாம சஹஸ்ரம் - பாடப்பட வேண்டியவை கீதையும் இறைவனின் ஆயிரம் நாமங்களும்

த்யேயம் ஸ்ரீபதி ரூபம் அஜஸ்ரம் - இடைவீடின்றி த்யானிக்கப்பட வேண்டியது திருமகள் மணாளனின் திருவுருவம்

நேயம் ஸஜ்ஜன சங்கே சித்தம் - மனத்தை அன்புடன் நிலைநிறுத்த வேண்டியது நன்மக்களின் கூட்டுறவில்

தேயம் தீன ஜனாய ச வித்தம் - செல்வம் வழங்கப்பட வேண்டியது ஏழ்மையில் இருப்பவர்களுக்கு

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Thursday, July 3, 2008

காமம், சினம், பேராசை, மயக்கம் (பஜ கோவிந்தம் - 26 )


காமம் க்ரோதம் லோபம் மோஹம்
த்யக்த்வாத்மானம் பாவய கோஹம்
ஆத்மஞான விஹினா மூடா
தே பச்யந்தே நரக நிகூடா:

காமம் க்ரோதம் லோபம் மோஹம் த்யக்த்வா - காமம், சினம், பேராசை, மயக்கம் இவற்றைத் துறந்துவிட்டு

ஆத்மானம் பாவய கோ அஹம் - மனத்தில் 'நான் யார்?' என்ற சிந்தனையை எப்போதும் கொள்.

ஆத்மஞான விஹினா மூடா - தன்னைப் பற்றிய அறிவு இல்லாதவர்கள் மூடர்கள்

தே பச்யந்தே நரக நிகூடா: - அவர்கள் எப்போதும் நரக வேதனையில் கட்டுப்பட்டவர்களாக (அறிவாளிகளால்) பார்க்கப் படுகிறார்கள்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Wednesday, June 25, 2008

சண்டை எதற்கு? பின் சமாதானம் எதற்கு? (பஜ கோவிந்தம் 25)


சத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ
மா குரு யத்னம் விக்ரஹசந்தௌ
பவ சமசித்த: சர்வத்ர த்வம்
வாஞ்சஸ்யசிராத் யாதி விஷ்ணுத்வம்

சத்ரௌ - எதிரிகளிடமோ

மித்ரே - நண்பர்களிடமோ

புத்ரே - பிள்ளைகளிடமோ

பந்தௌ - உறவினர்களிடமோ (யாரிடம் ஆனாலும் அவர்களுடன்)

மா குரு யத்னம் விக்ரஹ சந்தௌ - சண்டைக்கோ சமாதானத்திற்கோ முயற்சி செய்யவேண்டாம்

பவ சமசித்த: சர்வத்ர த்வம் - எல்லாரிடமும் எல்லா நேரமும் எங்கும் சமமான மனத்துடன் இரு

வாஞ்சஸ்ய அசிராத் யாதி விஷ்ணுத்வம் - இறைநிலையை விரைவில் அடைந்துவிடுவாய்

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Saturday, June 21, 2008

உன்னிலும் என்னிலும் எல்லோரிடத்தும் ஒரே இறைவன் (பஜ கோவிந்தம் 24)


த்வயி மயி சான்யத்ரய்கோ விஷ்ணு:
வ்யர்த்தம் குப்யஸி மா ஸஹிஷ்ணு:
சர்வஸ்மிந் அபி பஸ்யாத்மானம்
சர்வத்ரோ ஸ்த்ருஜ பேதஜ்ஞானம்


த்வயி - உன்னிலும்

மயி - என்னிலும்

ச அன்யத்ர - மற்றுமுள்ள எல்லாரிடத்திலும், எல்லாப் பொருளிலும்

ஏகோ விஷ்ணு: - ஒரே இறைவன் விஷ்ணு தான் இருக்கிறார்.

பேத அஞ்ஞானம் - வேறுபாடுகள் தோன்றுவது அறியாமையால்

வ்யர்த்தம் - அது வீண்

குப்யஸி மா - என் மேல் வீணாகக் கோபம் கொள்ளாதே

ஸஹிஷ்ணு: - பொறுமையாக இரு

சர்வஸ்மிந் அபி - எங்கும் எப்பொருளிலும் எவ்வுயிரிலும்

பஸ்யதி ஆத்மானம் - ஆத்மனைப் பார்

சர்வத்ரோ ஸ்த்ருஜ - எல்லா இடங்களிலும் வேறுபாடுகளைக் காண்பதை விட்டுவிடு.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Friday, June 20, 2008

வாழ்வு முற்றும் கனவு (பஜ கோவிந்தம் 23)


கஸ்த்வம் கோஹம் குத ஆயாத:
கா மே ஜனனி கோ மே தாத:
இதி பரிபாவய சர்வம் அசாரம்
விஷ்வம் த்யத்வா ஸ்வப்ன விசாரம்

கஸ்த்வம் (க த்வம்) - நீ யார்?

கோஹம் (க அஹம்) - நான் யார்?

குத ஆயாத: - எங்கிருந்து வந்தோம்?

கா மே ஜனனி - யார் என் தாய்?

கோ மே தாத: - யார் எனது தந்தை?

இதி பரிபாவய - இந்தக் கேள்விகளைக் கேட்டு விடைகளை அறிய முற்படு

சர்வம் அசாரம் - இங்கு எல்லாமே நிலையற்றது

விஷ்வம் த்யத்வா ஸ்வப்ன விசாரம் - இவையெல்லாம் கனவினைப் போன்றது என்பதனை உணர்ந்து எல்லாவற்றையும் துறந்துவிடு.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Thursday, June 19, 2008

பித்தனும் குழந்தையும் சித்தனும் (பஜ கோவிந்தம் 22)


ரத்யாகர்பட விரசித கந்தா:
புண்யாபுண்ய விவர்ஜித பந்தா:
யோகி யோக நியோஜித சித்தா:
ரமதே பாலோன்மத்தவத் ஏவ

ரத்யா கர்பட விரசித கந்தா: - கந்தல் துணிகளால் ஆன உடைகளை அணிந்திருப்பான்

புண்ய அபுண்ய விவர்ஜித பந்தா: - புண்ய பாவங்களைத் தாண்டிய நடத்தையை (பாதையை) உடையவனாய் இருப்பான்

யோகி யோக நியோஜித சித்தா: - யோகியாகவும் இறைவனிடம் இணைந்த சித்தத்தைக் கொண்டவனாகவும் இருப்பான்

ரமதே பால உன்மத்தவத் ஏவ - அப்படிப்பட்டவனே மகிழ்கிறான்; பார்வைக்குக் குழந்தையைப் போலும் பித்தனைப் போலும் இருப்பான்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

***

யோகம் என்ற சொல்லுக்கு ஐக்கியம் என்ற பொருளும் இருக்கிறது. பிரிந்திருந்த இரு பொருட்கள் ஒன்றாகச் சேர்வது யோகம்.

Wednesday, June 18, 2008

மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு மீண்டும் கருவறைத் தங்கல் (பஜ கோவிந்தம் 21)


புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்
இஹ சம்சாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே


புனரபி ஜனனம் - மீண்டும் ஒரு முறை பிறப்பு

புனரபி மரணம் - மீண்டும் ஒரு முறை இறப்பு

புனரபி ஜனனி ஜடரே சயனம் - மீண்டும் ஒரு முறை தாயின் கருப்பையில் தூக்கம்

இஹ சம்சாரே பஹு துஸ்தாரே - இந்த பிறப்பு-இறப்பு என்னும் சுழல் கடப்பதற்கு மிகக் கடினமானதொன்றாக இருக்கிறது

க்ருபயா பாரே பாஹி முராரே - அருள் கூர்ந்து என்னைக் காப்பாய் பெருமாளே.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

***

முராரி - முரனைக் கொன்றவன்.

Tuesday, June 17, 2008

கீதை கொஞ்சம் கங்கை கொஞ்சம் கண்ணன் கொஞ்சம் (பஜ கோவிந்தம் 20)


பகவத் கீதா கிஞ்சித் அதீதா
கங்கா ஜல லவ கணிகா பீதா
சக்ருதபி யேன முராரி சமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா

பகவத் கீதா கிஞ்சித் அதீதா - பகவத் கீதையை கொஞ்சமாவது படித்து அதன் படி நடந்திருந்தாலோ

கங்கா ஜல லவ கணிகா பீதா - கங்கை ஜலத்தை ஒரு துளியாவது பக்தியுடன் பருகியிருந்தாலோ

சக்ருதபி யேன முராரி சமர்ச்சா - முன்னர் எப்போதோ செய்த புண்ணிய வசத்தால் தற்செயலாக ஒருவன் நாராயணனை அர்ச்சித்திருந்தாலோ

க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா - அப்படிப்பட்டவன் யமனுடன் வாதிக்க வேண்டிய தேவையின்றி முக்தியை அடைவான்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

***

முன்னர் ஒரு பாட்டில் கங்கையில் நீராடினாலும், நோன்புகள் நோற்றாலும், தான தருமங்கள் செய்தாலும் ஞானமில்லாதவன் நூறு நூறு பிறவிகள் எடுத்தாலும் முக்தியடைய மாட்டான் என்று சொன்னவர் இங்கு அதற்கு நேர் எதிராகச் சொல்கிறாரே என்று எண்ணலாம். கொஞ்சம் சிந்தித்தால் என்ன சொல்கிறார் என்பது விளங்கும்.

கங்கையில் நீராடிவிட்டு, நோன்புகள் நோற்றுவிட்டு, தான தருமங்கள் செய்துவிட்டு ஆனால் ஆத்ம ஞானத்தை அடையாமல் இறுமாப்பினை அடைந்தவன் முக்தி அடையமாட்டான்; அங்கே சொல்வது ஞானத்தின் முக்கியத்துவத்தை.

ஆனால் அதே நேரத்தில் கங்கையில் நீராடுவதும் (கங்கை நீரை ஒரு துளி அருந்துவதும்), நோன்புகள் நோற்பதும் (முராரியை வணங்குவதும்), தான தருமங்கள் செய்வதும் (கீதையைப் படித்து அதன் படி நடத்தலும்) முக்திக்கு முதல் படியான ஹ்ருதய சுத்தத்தைக் கொடுக்கும். அந்த இதயத் தூய்மையை அடைந்த பின்னரே ஞானம் தோன்றும். பின்னர் முக்தி கிடைக்கும். அதனால் முதல் படியான இதயத் தூய்மையை அடையும் வழிகளை இங்கே கூறுகிறார். இங்கே சொல்வது இதயத் தூய்மை அடைவதின் முக்கியத்துவத்தை.

யோகத்திலோ போகத்திலோ கூட்டத்திலோ தனிமையிலோ எங்கே மகிழ்ச்சி? (பஜ கோவிந்தம் 19)


யோக ரதோ வா போக ரதோ வா
சங்க ரதோ வா சங்க விஹீன:
யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்
நந்ததி நந்ததி நந்ததி ஏவ

யோக ரதோ வா போக ரதோ வா - ஒருவர் யோகத்திலோ போகத்திலோ எதில் வேண்டுமானாலும் மனமகிழ்ச்சி அடையலாம்

சங்க ரதோ வா சங்க விஹீன: - தனிமையிலோ கூட்டத்திலோ எங்கு வேண்டுமானாலும் மகிழ்ச்சி அடையலாம்

யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம் - ஆனால் யாருடைய மனம் இறைவனின் நினைவில் மூழ்கி மகிழ்ந்து இருக்கிறதோ

நந்ததி நந்ததி நந்ததி ஏவ - அவர் மட்டுமே மகிழ்கிறார்கள்; மகிழ்கிறார்கள்; உண்மையில் மகிழ்கிறார்கள்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Friday, June 13, 2008

வீடு மரத்தடி படுக்கை கட்டாந்தரை (பஜ கோவிந்தம் 18)


சுர மந்திர தரு மூல நிவாஸ:
சய்யா பூதலம் அஜினம் வாச:
சர்வ பரிக்ரஹ போக த்யாக:
கஸ்ய சுகம் ந கரோதி விராக:

ஒரு உண்மை சன்யாசி எப்படி இருப்பான் என்று இந்தப் பாடலில் சொல்கிறார்.

சுர மந்திர தரு மூல நிவாஸ: - வசிப்பதோ தேவாலயங்களில் உள்ள மரங்களில் அடியில்

சய்யா பூதலம் - படுக்கையோ கட்டாந்தரை

அஜினம் வாச: - உடுப்பதோ தோலாடை

சர்வ பரிக்ரஹ போக த்யாக: - எல்லாவிதமான சுகத்தையும் அடையவேண்டும் என்ற ஆசையையும் அனுபவத்தையும் துறந்துவிட்டவர்

கஸ்ய சுகம் ந கரோதி விராக: - அப்படிப்பட்ட ஆசையற்றவனுக்கு சுகம் ஏற்படாமல் எப்படி போகும்? அப்படிப்பட்டவரே மிக உயர்ந்த சுகத்தை அடைவார்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Thursday, June 12, 2008

கங்கையில் குளித்தாலும் பயனில்லை (பஜ கோவிந்தம் 17)


குரு தே கங்கா சாகர கமனம்
வ்ரத பரிபாலனம் அதவா தானம்
ஞான விஹீன: சர்வ மதேன
முக்திம் ந பஜதி ஜன்ம சதேன:

குரு தே கங்கா சாகர கமனம் - கங்கை கடலுடன் கலக்கும் சங்கமத்திற்குச் சென்று ஒருவன் நீராடலாம்

வ்ரத பரிபாலனம் - பலவிதமான விரதங்களை அனுஷ்டிக்கலாம்

அதவா தானம் - அளவில்லாமல் தானங்களையும் செய்யலாம்

ஞான விஹீன: - இறைஞானம் இல்லாதவன்

முக்திம் ந பஜதி ஜன்ம சதேன: - நூறு நூறு பிறவிகள் எடுத்தாலும் பந்தங்களில் இருந்து விடுதலை அடைவதில்லை

சர்வ மதேன - இதுவே எல்லோருடைய கருத்தும் (மதம் என்றால் கருத்து என்று ஒரு பொருள் உண்டு)

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Wednesday, June 11, 2008

துறவிகளையும் ஆசைகள் விடுவதில்லை (பஜகோவிந்தம் 16)


அக்ரே வஹ்னி: ப்ர்ஸ்தே பானு:
ராத்ரௌ சுபுக சமர்ப்பித ஜானு:
கரதல பிக்ஷ: தருதல வாச:
ததபி ந முஞ்சதி ஆசா பாச:


எல்லாவற்றையும் துறந்த துறவிகள் இந்த மாதிரி வாழ்க்கை வாழ்கிறார்கள்:

அக்ரே வஹ்னி: - முன்னால் குளிருக்கு இதமாக நெருப்பு இருக்கிறது

ப்ர்ஸ்தே பானு: - முதுகுக்குப் பின்னால் மறையும் கதிரவன் இருக்கிறான்

ராத்ரௌ சுபுக சமர்ப்பித ஜானு: - இரவு நேரத்தில் குளிரிலிருந்து தப்பிக்க முழங்கால்களுக்கு நடுவில் தாடையை வைத்திருக்கிறார்

கரதல பிக்ஷ: - சாப்பிடுவதற்கு பிச்சை எடுக்கும் பாத்திரமோ கைகள்

தருதல வாச: - மரத்தடியிலேயே வாழ்க்கை

ததபி ந முஞ்சதி ஆசா பாச: - இந்த நிலையிலும் ஆசாபாசங்கள் ஒருவரை விடுவதில்லை.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

***

இந்தப் பாடலில் போலிச் சாமியார்களைப் பற்றிச் சொல்லவில்லை ஆதிசங்கரர். உண்மையான சந்நியாசிகளின் வாழ்க்கை முறையைக் கூறி அப்படிப்பட்டவர்களையே ஆசாபாசங்கள் விடுவதில்லை என்று சொல்லி பற்றுகளின் பந்தங்களின் வலிமையைச் சொல்கிறார்.

Monday, June 9, 2008

வயதானாலும் ஆசை விடுகிறதா என்ன? (பஜகோவிந்தம் 15)


அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தஸன விஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபி ந முஞ்சதி ஆசாபிண்டம்

அங்கம் கலிதம்
- உடல் நடுக்கமடைந்து விட்டது

பலிதம் முண்டம் - தலை நரைத்துவிட்டது

தஸன விஹீனம் ஜாதம் துண்டம் - வாயில் உள்ள பற்களோ விழுந்துவிட்டன

வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம் - வயதான காலத்தில் ஒரு கோலின் உதவியால் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்கிறார்

ததபி ந முஞ்சதி ஆசாபிண்டம் - ஆனாலும் ஆசையின் கூட்டம் மட்டும் விடவில்லை.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

***

பலர் என்னிடம் வயசான காலத்துல சாமி, கோவில் என்று போகலாம். சின்ன வயதில் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துவிட வேண்டும் என்று சொல்லுவார்கள். அவர்களுக்கு எல்லாம் இதனைத் தான் நான் சொல்வது - சின்ன வயதில் அனுபவிக்க வேண்டியதெல்லாம் அனுபவிக்கவேண்டியது தான்; ஆனால் சாமி, கோவில் என்று சின்ன வயதிலேயே போகவில்லை என்றால் வயதான காலத்திலும் அது வராது; இன்னும் கொஞ்சம் வயதாகட்டும்; இன்னும் கொஞ்சம் வயதாகட்டும் என்று தான் தோன்றும்; ஏனெனில் ஆசைகளின் கூட்டங்கள் அத்தகையவை; அவற்றின் வேகமும் அத்தகையவை. சிறு வயதிலேயே ஆன்மிகத்தில் சிறிது பயிற்சி இருந்தால் சரியான நேரத்தில் ஆசைகள் கழிந்து ஆன்மிகம் மிகும்.

வயிற்றை வளர்க்கவே இத்தனை வேடங்கள் (பஜ கோவிந்தம் 14)


ஜடிலோ முண்டி லுஞ்சித கேச:
காஷாயாம்பர பஹுக்ருத வேஷ:
பஷ்யன்னபி ச ந பஷ்யதி மூடோ
ஹுதர நிமித்தம் பஹுக்ருத வேஷ:

ஜடிலோ முண்டி லுஞ்சித கேச: - தன் தலைமுடியை சடையாக மாற்றி ஒருவர் தலை மேல் கட்டியிருக்கிறார்; இன்னொருவரோ தலைமுடியை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார்.

காஷாயாம்பர - இன்னொருவரோ காவியுடையை அணிந்து கொண்டிருக்கிறார்.

பஹுக்ருத வேஷ: - இப்படி பலவித வேடங்கள் அணிந்து கொண்டு எல்லாம் துறந்தவர்கள் போல் காட்டிக் கொண்டு அலைகிறார்கள்.

பஷ்யன்னபி ச ந பஷ்யதி மூடோ - அந்த மூடர்கள் எல்லாம் காணக் கண்ணிருந்தும் (அறிவிருந்தும்) உண்மையைக் காணாதவர்கள்

ஹுதர நிமித்தம் பஹுக்ருத வேஷ: - உறுதியாக இந்த எல்லாவிதமான வேடங்களும் வயிற்றை வளர்ப்பதற்காக மட்டும் தான்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

***

இந்தப் பாடலில் வெளி வேஷம் மட்டும் போட்டுக் கொண்டிருக்கும் பொய்த் துறவிகளைக் கண்டிக்கிறார் ஆதிசங்கரர்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்

என்னும் திருக்கிறளின் சாயல் இந்தப் பாடலில் தெரிகிறது.

Saturday, June 7, 2008

பவக்கடலுக்குப் படகு (பஜ கோவிந்தம் 13)


கா தே காந்தா தன கத சிந்தா
வாதுல கிம் தவ நாஸ்தி நிவந்தா
த்ரிஜகதி சஜ்ஜன சங்கதிர் ஏகா
பவதி பவார்னவ தரனே நௌகா

கா தே காந்தா தன கத சிந்தா - மனைவி மக்கள், வீடு வாசல், சொத்து சுகம் போன்றவற்றில் இருந்து எழும் கவலைகள் உனக்கு ஏன்?

வாதுல கிம் - மூடனே ஏன் இந்த நிலை உனக்கு?

தவ நாஸ்தி நிவந்தா - உனக்கு இவை நல்ல கதி இல்லை.

த்ரிஜகதி சஜ்ஜன சங்கதிர் ஏகா - மூன்று உலகங்களிலும், உண்மையை விரும்பும் நல்லவர்களின் உண்மையான நட்பு மட்டுமே

பவ ஆர்னவ தரனே நௌகா பவதி - பிறப்பு இறப்பு என்னும் மாபெரும் கடலைக் கடக்க உதவும் படகு போன்றது.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

காலம் விளையாடுகிறது வாழ்நாளோ தீர்கிறது (பஜகோவிந்தம் 12)


தின யாமின்யௌ சாயம் ப்ராத:
சிஷிர வஸந்தௌ புனர் ஆயாத:
கால: க்ரீடதி கச்சதி ஆயு:
தத் அபி ந முஞ்சதி ஆசா வாயு:

தின யாமின்யௌ - பகலும் இரவும்

சாயம் ப்ராத: - மாலையும் காலையும்

சிஷிர வஸந்தௌ - வாடையும் கோடையும்

புனர் ஆயாத: - மீண்டும் மீண்டும் வருகின்றன.

கால: க்ரீடதி - காலமோ தன் விளையாட்டினை விளையாடிக் கொண்டிருக்கிறது.

கச்சதி ஆயு: - வாழ்நாளோ போய்க் கொண்டிருக்கிறது.

தத் அபி ந முஞ்சதி ஆசா வாயு: - ஆனாலும் என்ன ஆசையெனும் புயல் மட்டும் நின்றபாடில்லை.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.